Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறு குளமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

சிறு குளமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

சிறு குளமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

சிறு குளமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

ADDED : செப் 23, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
மப்பேடு:மப்பேடு - கீழச்சேரி சாலை சேதமடைந்து, மழைநீர் தேங்கி சிறு குளமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் மப்பேடு மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு ஊராட்சியில் இருந்து, கீழச்சேரி செல்லும் சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இச்சாலை வழியே, கீழச்சேரியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் நடந்துகூட செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சாலை வழியாக இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளங்களில் சிக்கி சிறு சிறு காயமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும், ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us