Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ADDED : ஜூன் 25, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
கடம்பத்துார்:தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இங்குள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இங்கிருந்து தண்டலம் செல்லும் நெடுஞ்சாலையோரம், மேவளூர்குப்பம் பகுதியில் இருந்து தண்டலம் வரை இருபுறமும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பிற வாகனங்களில் வருவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஒருபுறம், விபத்து அபாயம் மறுபுறம் என்ற ஆபத்தான சூழலில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

எனவே, போக்குவரத்து போலீசார், இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us