Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ADDED : செப் 10, 2025 09:45 PM


Google News
திருவள்ளூர்:வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

இது தொடர்பாக திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில், காலை 10:00 மணிக்கு நடைபெறும்.

கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு, மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும், மாவட்ட அளவிலான கூட்டத்தில் விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us