Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆவடியில் வரும் 18ல் உங்களை தேடி திட்டம்

ஆவடியில் வரும் 18ல் உங்களை தேடி திட்டம்

ஆவடியில் வரும் 18ல் உங்களை தேடி திட்டம்

ஆவடியில் வரும் 18ல் உங்களை தேடி திட்டம்

ADDED : ஜூன் 13, 2025 07:58 PM


Google News
திருவள்ளூர்:'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், வரும் 18ம் தேதி ஆவடியில் கலெக்டர் பங்கேற்க உள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மக்களை தேடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண, அரசு இயந்திரம் களத்திற்கே வரும், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தை முதல்வர் அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமையன்று, மாவட்ட கலெக்டர் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த ஆய்வின்போது, அரசு அலுவலகங்களை பார்வையிட்டும், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தும், அரசின் அனைத்து நல திட்டம், சேவைகள் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் 18ம் தேதி ஆவடி வட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us