ADDED : ஜூன் 15, 2025 08:13 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, சுபாஷ் சந்திரபோஸ் நகரில் வசிப்பவர் இக்பால், 56; கூலித்தொழிலாளி. அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று நள்ளிரவு வீடு திரும்பினார்.
அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருத 5 சவரன் நகை திருடு போனதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.