Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கால்நடை மருந்தகம் சின்னகடம்பூரில் அமையுமா?

கால்நடை மருந்தகம் சின்னகடம்பூரில் அமையுமா?

கால்நடை மருந்தகம் சின்னகடம்பூரில் அமையுமா?

கால்நடை மருந்தகம் சின்னகடம்பூரில் அமையுமா?

ADDED : பிப் 25, 2024 02:24 AM


Google News
திருத்தணி,:திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அனைவரும் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ந்து வருகின்றனர். மேலும், சின்னகடம்பூர் அருகே பெரியகடம்பூர், கன்னிகாபுரம் ஆகிய ஊராட்சிகளில், 2,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களும் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கண்ட ஊராட்சிகளில் கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கால்நடைகளுக்கு நோய் தாக்கினால் மற்றும் தடுப்பூசி போடுவதற்கு, சின்னகடம்பூர் பகுதியில் இருந்து, 13 கி.மீ., துாரம் உள்ள திருத்தணி கால்நடை மருந்தகத்திற்கு கால்நடைகளை அழைத்து வரவேண்டியுள்ளன.

இதனால் விவசாயிகளின் கால்நடைகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போவதால் கால்நடைகள் இறந்து விடுகின்றன. சின்னகடம்பூர் ஊராட்சியில், கால்நடை மருந்தகம் அல்லது கிளை நிலையம் அமைக்க வேண்டும் என ஊராட்சியில் உள்ள அனைத்து விவசாயிகள் சார்பில் பலமுறை கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சின்னகடம்பூரில் கால்நடை மருந்தக வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us