/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர்கள் பலிமாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர்கள் பலி
மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர்கள் பலி
மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர்கள் பலி
மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர்கள் பலி
ADDED : ஜன 11, 2024 09:33 PM
மாமல்லபுரம்:மேகாலயா, ஷில்லாங் பகுதியைச் சேர்ந்தவர் பரங்சிங் தோலிங், 26. அதே மாநிலம், கிழக்கு காஷி ஹில் பகுதியைச் சேர்ந்தவர் லரிசா மெரி லாட்டிங், 22.
இவர்கள் இருவரும், மாமல்லபுரம், தேவனேரி தனியார் கடற்கரை விடுதியில் பணிபுரிந்தனர். நேற்று மாலை 3:00 மணிக்கு, இருவரும், அவர்களுடன் பணிபுரியும் மேலும் ஒருவருடன், மாமல்லபுரம் கடலில் குளித்தனர்.
அப்போது, அவர்களை ராட்சத அலை இழுத்துச்சென்றது. அதில், பரங்சிங் தோலிங், கடற்கரை கோவில் பகுதி பாறை கற்கள் இடுக்கில் சிக்கி உயிரிழந்தார்.
லரிசா மெரி லாட்டிங் உடல், கோவில் தெற்கு பகுதியில் கரை ஒதுங்கியது. மற்றொருவரை உயிருடன் மீனவர்கள் மீட்டனர்.
தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பொன்னேரி
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் சாலை சந்திப்பில் உள்ள மழைநீர் கால்வாயில், ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். நிலைய அலுவலர் சம்பத் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், கால்வாயில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரித்தனர். அவர் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி, பாபுகிருஷ்ணன் 45, என்பது தெரிந்தது. பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.