Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/நிலம் வழங்கிய விவசாயிகள் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

நிலம் வழங்கிய விவசாயிகள் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

நிலம் வழங்கிய விவசாயிகள் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

நிலம் வழங்கிய விவசாயிகள் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 05, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் நகரில் இருந்து கனகம்மாசத்திரம், திருத்தணி, பொன்பாடி வரை உள்ள இரு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலை சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிக்காக, விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டன.

அந்த வகையில், திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராம விவசாயிகள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று, ஆறு வழிச்சாலை பணிக்காக வழங்கிய நிலத்திற்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என, பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை விரிவாக்கம் நடக்கும் இடத்தில் பணிகளை தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஒப்பந்தாரர் தரப்பில், 'உங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்' என, சமரசம் செய்தனர். பின், சாலை விரிவாக்கம் பணிகள் மீண்டும் துவங்கியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us