ADDED : மே 29, 2025 07:47 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்மஜித், 74. கடந்த 26ம் தேதி இவரது வீட்டின் அருகே உள்ள மின்கம்பங்களுக்கு இடையே சென்ற மரக்கிளைகளை கடம்பத்துார் மின்வாரிய ஊழியர்கள் வெட்டினர்.
அப்போது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அப்துல்மஜித் மீது மரக்கிளை ஒன்று விழுந்தது.
இதில் படுகாயமடைந்த அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து கடம்பத்துார் போலீசார், விசாரித்து வருகின்றனர்.