Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இரு லாரிகள் மோதிய விபத்து இடையில் சிக்கி ஓட்டுநர் பலி

இரு லாரிகள் மோதிய விபத்து இடையில் சிக்கி ஓட்டுநர் பலி

இரு லாரிகள் மோதிய விபத்து இடையில் சிக்கி ஓட்டுநர் பலி

இரு லாரிகள் மோதிய விபத்து இடையில் சிக்கி ஓட்டுநர் பலி

ADDED : ஜூன் 05, 2025 02:56 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி, மீன் ஏற்றி செல்ல பயன்படும் லாரி ஒன்று காலியாகசென்றுக் கொண்டிருந்தது. இந்த லாரியை, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் ஓட்டி சென்றார்.

மற்றொரு டிரைவரான துாத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சுடலை, 50, என்பவர், லாரி கேபினில் துாங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி மேம்பாலத்தில், முன்னால் சென்றுக் கொண்டிருந்த கரி லோடு லாரியின் மீது மோதியது.

இந்த விபத்தில், மீன் லாரியின் முன்பகுதி உருக்குலைந்து, கரி லாரியின் பின்னால் சிக்கிக் கொண்டது. மீன் லாரியின் ஓட்டுநர் நல்லதம்பி, லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். துாங்கிக் கொண்டிருந்த மற்றொரு ஓட்டுநரான சுடலை, லாரிகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த கவரைப்பேட்டை போலீசார், கிரேன் உதவியுடன் லாரிகளை அப்புறப்படுத்தி, சுடலையின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us