Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருமண முகூர்த்த நாளில் திருத்தணியில் திரண்ட பக்தர்கள்

திருமண முகூர்த்த நாளில் திருத்தணியில் திரண்ட பக்தர்கள்

திருமண முகூர்த்த நாளில் திருத்தணியில் திரண்ட பக்தர்கள்

திருமண முகூர்த்த நாளில் திருத்தணியில் திரண்ட பக்தர்கள்

ADDED : செப் 14, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
திருத்தணி;திருத்தணி முருகன் கோவிலில் நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று வார விடுமுறை நாள் மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், மூலவரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

முன்னதாக மூலவருக்கு, அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் வீதியுலா வந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us