Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பள்ளி நேரங்களில் கடும் அவதி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பள்ளி நேரங்களில் கடும் அவதி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பள்ளி நேரங்களில் கடும் அவதி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பள்ளி நேரங்களில் கடும் அவதி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ADDED : ஜூன் 01, 2025 09:33 PM


Google News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியில் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்தை மட்டுமே நம்பியுள்ளனர். கும்மிடிப்பூண்டி பகுதியில், பல ஆண்டுகளாக பள்ளி நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் பலர், நிரம்பி வழியும் பேருந்துகளின் படிகளில் தொங்கியபடி செல்லும் அவலநிலை தொடர்கிறது.

கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால், நடப்பு கல்வியாண்டில், பள்ளி நேரத்தில் போதிய பேருந்துகள் இயக்கி, மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us