Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திருவள்ளூரில் 23வரை நடக்கிறது

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திருவள்ளூரில் 23வரை நடக்கிறது

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திருவள்ளூரில் 23வரை நடக்கிறது

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திருவள்ளூரில் 23வரை நடக்கிறது

ADDED : ஜன 02, 2024 07:36 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் 'சிறப்பு முகாம்' இன்று முதல், வரும் 23 வரை நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், இன்று 3ல் துவங்கி, வரும் 23 வரை, 13 நாட்கள் நடக்கிறது. காலை, 10:00 - மாலை 3:00 மணி வரை நடைபெறும்.

முகாம் விபரம்:

இன்று - ஆவடி மாநகராட்சி, திருத்தணி நகராட்சி, ஆரணி பேரூராட்சி, அயப்பாக்கம் ஊராட்சி.

நாளை - ஆவடி மாநகராட்சி, பொன்னேரி நகராட்சி, பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, அடையாளம்பட்டு ஊராட்சி.

ஜன., 5 - ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சி, பள்ளிப்பட்டு பேரூராட்சி, சோரஞ்சேரி, புள்ளிலைன் ஊராட்சி.

ஜன.,6 - ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு, திருநின்றவூர் நகராட்சி, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, கன்னிப்பாளையம், பொத்துார் ஊராட்சி.

ஜன.,8-ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி, வெள்ளானுார், வெள்ளிவாயல்சாவடி ஊராட்சி.

ஜன.,9 - ஆவடி மாநகராட்சி, பொன்னேரி, பூந்தமல்லி நகராட்சி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி, சென்னீர்குப்பம் ஊராட்சி.

ஜன., 11 - ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருவேற்காடு நகராட்சி, திருமழிசை பேரூராட்சி, மோரை, அத்திப்பட்டு ஊராட்சி.

ஜன.,12 - ஆவடி மாநகராட்சி, திருத்தணி நகராட்சி, மீஞ்சூர் பேரூராட்சி, வானகரம், நெமிலிச்சேரி ஊராட்சி.

ஜன.,19 -ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, நடுக்குத்தகை, வெள்ளிவாயல் ஊராட்சி.

ஜன.,22 - விளாங்காட்டுபாக்கம், பாலவேடு ஊராட்சி.

ஜன.,23 - ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி, விச்சூர் ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாம்களில், வருவாய், உள்ளாட்சி, காவல், மின்சாரம், வீட்டுவசதி வாரியம்உள்ளிட்ட துறைகள் தொடர்பான குறைகளை மனுவாக அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us