Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ADDED : ஜூன் 07, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
சோழவரம்:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், காரனோடை பகுதியில் உள்ள இணைப்பு சாலையோரங்களில் நுங்கு, இளநீர் ஆகியவற்றின் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. மேலும், ஹோட்டல், காய்கறி மற்றும் பழக்கடைகளின் உணவு கழிவுகளும் கொட்டப்படுகின்றன.

இந்த குப்பை கழிவுகளில் உணவு தேடுவதற்காக கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை வீடுகளில் வைத்து பராமரிக்கமால் சாலைகளில் விடுகின்றனர்.

இவை உணவு தேடி சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும்போது, வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையை கடக்கும்போது, சிறு சிறு விபத்துகளுக்கும் உள்ளாகின்றனர்.

எனவே, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதுடன், தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளின் அருகே உணவு கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us