Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இணைப்பு சாலையை சீரமைக்க ஆத்துார் வாசிகள் கோரிக்கை

இணைப்பு சாலையை சீரமைக்க ஆத்துார் வாசிகள் கோரிக்கை

இணைப்பு சாலையை சீரமைக்க ஆத்துார் வாசிகள் கோரிக்கை

இணைப்பு சாலையை சீரமைக்க ஆத்துார் வாசிகள் கோரிக்கை

ADDED : மே 21, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
சோழவரம்:சோழவரம் அடுத்த காரனோடை - ஆத்துார் பகுதிகளுக்கு இடையே, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைந்துள்ளது.

இந்த பாலத்தின் அருகே உள்ள இணைப்பு சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால், ஆத்துாரில் இருந்து சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது.

இணைப்பு சாலை முழுதும், மண் குவிந்து புழுதி பறக்கிறது.

ஆத்துார், புதிய எருமைவெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை அடைய கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, சாலையை முற்றிலும் பயன்படுத்த முடியாமல் கிராமவாசிகள் தவிக்கின்றனர். இந்த இணைப்பு சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us