Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பகலில் ஒளிரும் மின்விளக்கு வீணாகும் மக்கள் வரிப்பணம்

பகலில் ஒளிரும் மின்விளக்கு வீணாகும் மக்கள் வரிப்பணம்

பகலில் ஒளிரும் மின்விளக்கு வீணாகும் மக்கள் வரிப்பணம்

பகலில் ஒளிரும் மின்விளக்கு வீணாகும் மக்கள் வரிப்பணம்

ADDED : ஜூன் 25, 2025 03:02 AM


Google News
Latest Tamil News
திருமழிசை:உயர்கோபுர மின் விளக்குகள் இரவு, பகலாக ஒளிர்வதால், மக்களின் வரிப்பணம் வீணாவதாக, பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் திருமழிசை, பாப்பரம்பாக்கம், செட்டிபேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை உட்பட பல பகுதிகளில், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உயர்கோபுர மின்விளக்குகள் 24 மணி நேரமும் ஒளிர்கின்றன. இதனால், மின்சாரம் மற்றும் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகல் நேரங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் ஒளிர்வதை தடுக்கவும், மின்சாரத்தை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மின்வாரிய உதவி பொறியாளர் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பது மட்டும் தான் எங்கள் பணி. அந்த விளக்குகளை பராமரிப்பது, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தான் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், 'ஆட்டோமேட்டிக் சுவீட்ச்' அமைக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us