Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வெயிலில் காயும் வாகனங்கள் மீஞ்சூரில் ரயில் பயணியர் அதிருப்தி

வெயிலில் காயும் வாகனங்கள் மீஞ்சூரில் ரயில் பயணியர் அதிருப்தி

வெயிலில் காயும் வாகனங்கள் மீஞ்சூரில் ரயில் பயணியர் அதிருப்தி

வெயிலில் காயும் வாகனங்கள் மீஞ்சூரில் ரயில் பயணியர் அதிருப்தி

ADDED : ஜூலை 13, 2024 08:28 PM


Google News
Latest Tamil News
மீஞ்சூர்:மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு கல்வி, தொழில், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு செல்லும் பயணியர் தாங்கள் கொண்டு இருசக்கர வாகனங்களை அங்குள்ள கட்டணம் செலுத்தும் 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி செல்கின்றனர்.

ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, பார்க்கிங் வளாகம் கண்காணிக்கப்பட்டு, வாகனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இங்கு தினமும், 200க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இவை நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் கூரை அமைக்கப்படாமல் திறந்த வெளியாக இருக்கிறது.

ரயில் பயணியரின் வாகனங்கள் திறந்த வெளியில் நீண்டநேரம் நிறுத்தப்படுவதால், மழை, வெயில் காலங்களில் அவை பாதிப்பிற்கு உள்ளாகி உதிரிபாகங்கள் பழுதடைகின்றன.

கோடைகாலங்களில் அதிக வெப்பத்தில் வாகனங்களின் வர்ணம் மங்கிபோகிறது. வாகனங்கள் நிறுத்துவற்கு உரிய கட்டணம் செலுத்தும் நிலையில் கூரை இல்லாதது ரயில் பயணியர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

வாகன நிறுத்துமிடத்தில், கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us