Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தொழிற்சாலையில் தொழிலாளி மர்மச்சாவு

தொழிற்சாலையில் தொழிலாளி மர்மச்சாவு

தொழிற்சாலையில் தொழிலாளி மர்மச்சாவு

தொழிற்சாலையில் தொழிலாளி மர்மச்சாவு

ADDED : ஜூலை 22, 2024 06:09 AM


Google News
பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே, வடமதுரை பெரிய காலனியில் வசித்து வந்தவர் வில்சன், 43. இவருக்கு திருமணமாகி, அஞ்சலா என்ற மனைவி, ஆகாஷ், ரித்தீஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். வில்சன் கடந்த, 13 ஆண்டுகளாக ஜெயபுரம் கிராமத்தில் உள்ள தனியார் எண்ணெய் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பணியில் இருந்த இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் பெரியபாளயைம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்திருப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பார்த்தபோது வில்சன் இறந்து விட்டதாக கூறினர்.

வில்சன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டபோது, மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார் என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், வில்சன் சாவில் மர்மம் இருப்பதாக பெரியபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us