UPDATED : மார் 14, 2025 02:17 AM
ADDED : மார் 13, 2025 10:54 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கிராமத்தில் வசித்தவர் ஜெய்சாய், 15. பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பள்ளியில் சிறப்பு வகுப்பு முடிந்து, டூ-வீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், அடையாளம் தெரியாத வாகனத்தின் பின்னால் மோதி பலத்த காயம் அடைந்தார்.
கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.