/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி நகராட்சியில் பேனர் வைக்க நிபந்தனை திருத்தணி நகராட்சியில் பேனர் வைக்க நிபந்தனை
திருத்தணி நகராட்சியில் பேனர் வைக்க நிபந்தனை
திருத்தணி நகராட்சியில் பேனர் வைக்க நிபந்தனை
திருத்தணி நகராட்சியில் பேனர் வைக்க நிபந்தனை
ADDED : மார் 13, 2025 10:53 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பிளாக்ஸ் பேனர் வைத்து விளம்பரம் செய்கின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பேனர்கள் வைப்பதற்கு தடை விதித்திருந்தது. தற்போது, பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றம் சில தளர்வுகள் அறிவித்துள்ளதால் நகராட்சியில் பேனர்கள் வைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் நகராட்சி நிர்வாகம் பேனர்கள் வைப்பதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகராட்சி எல்லைக்குள் பேனர் வைக்கும் அரசியல் வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் நகராட்சி அனுதியுடன் பேனர் வைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பேனருக்கும், 500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அனுமதியின்றி பேனர் வைத்தால், ஒரு வருடம் சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும். ஆறு நாட்கள் மட்டுமே பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.