/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாமனார் மாமியாரை தாக்கிய மருமகன் கைது மாமனார் மாமியாரை தாக்கிய மருமகன் கைது
மாமனார் மாமியாரை தாக்கிய மருமகன் கைது
மாமனார் மாமியாரை தாக்கிய மருமகன் கைது
மாமனார் மாமியாரை தாக்கிய மருமகன் கைது
ADDED : ஜூன் 11, 2024 05:08 AM
கானத்துார்: உத்தண்டி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 37. ஆட்டோ ஓட்டுனர். மனைவி விமலா, 25. நேற்றுமுன்தினம், இவர்களின் மூன்று மகள்களுக்கு, திருப்போரூர், முருகன் கோவிலில் காது குத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், உறவினர்கள் அளித்த 1 கிராம் தங்க மோதிரத்தை, விமலா தொலைத்ததாக கூறப்படுகிறது. சக்திவேல், மோதிரம் குறித்து விமலாவுடன் சண்டை போட்டுள்ளார்.
இதை, விமலாவின் தாய் கீதா, 58, தந்தை சரவணன், 61, ஆகியோர் தட்டி கேட்டனர். சக்திவேல், இரும்பு ராடை எடுத்து, இருவரது தலையில் தாக்கினார்.
கானத்துார் போலீசார், சக்திவேலை கைது செய்து விசாரிக்கின்றனர்.