/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரூ.48 லட்சம் பணம் கும்மிடியில் பறிமுதல் ரூ.48 லட்சம் பணம் கும்மிடியில் பறிமுதல்
ரூ.48 லட்சம் பணம் கும்மிடியில் பறிமுதல்
ரூ.48 லட்சம் பணம் கும்மிடியில் பறிமுதல்
ரூ.48 லட்சம் பணம் கும்மிடியில் பறிமுதல்
ADDED : ஜூலை 22, 2024 01:38 AM
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., அருகே, நேற்று அதிகாலை சந்தேகம் ஏற்படும்படி இருவர் நின்றிருந்தனர்.
ரோந்து பணியில் இருந்த கும்மிடிப்பூண்டி போலீசார், அவர்களிடம் விசாரித்ததில், முன் பின் முரணாக பேசினர். அவர்கள் வைத்திருந்த துணி பைகளை சோதனை செய்ததில், கணக்கில் வராத 48 லட்சம் ரூபாய் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த பிரசாந்த், 42; நாகவெங்கட் பவன், 25, என்பது தெரிந்தது. மேலும், சென்னையில் நகை வாங்குவதற்காக சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இருவரும், கும்மிடிப்பூண்டியில் இறங்கி, பேருந்தில் செல்ல காத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்த பணம் மற்றும் இருவரையும், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருவான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். வருமான வரித்துறையினர், இருவரிடமும் விசாரிக்கின்றனர்.