Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்னேரியில் வழித்தடம் மாற்றி இயக்கப்படும் தனியார் பேருந்துகளை கண்காணிக்க கோரிக்கை

பொன்னேரியில் வழித்தடம் மாற்றி இயக்கப்படும் தனியார் பேருந்துகளை கண்காணிக்க கோரிக்கை

பொன்னேரியில் வழித்தடம் மாற்றி இயக்கப்படும் தனியார் பேருந்துகளை கண்காணிக்க கோரிக்கை

பொன்னேரியில் வழித்தடம் மாற்றி இயக்கப்படும் தனியார் பேருந்துகளை கண்காணிக்க கோரிக்கை

ADDED : ஜூலை 18, 2024 09:33 PM


Google News
பொன்னேரி:பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து, திருவள்ளூர், பழவேற்காடு, திருத்தணி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். ஒரு சில தனியார் பேருந்துகள், அதற்கான வழித்தடத்தில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றன.

சென்னை ஆவடியில் இருந்து, கும்மிடிப்பூண்டி வரை அனுமதிக்கப்பட்ட தனியார் பேருந்து ஒன்று, செங்குன்றம், பொன்னேரி, மெதுார், தேவம்பட்டு வழியாக செல்ல வேண்டும். இது அந்த வழித்தடத்தில் பயணிக்காமல், செங்குன்றம் - பொன்னேரி இடையே மட்டும் பயணிக்கிறது.

இதேபோன்று, பொன்னேரி - திருவள்ளூர் வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டிய தனியார் பேருந்து ஒன்றும், பொன்னேரி - செங்குன்றம், பொன்னேரி - பழவேற்காடு என பயணிக்கிறது.

தனியார் பேருந்துகள் அனுமதி பெற்ற வழித்தடத்தில் இயங்காமல் மாற்று வழித்தடங்களில் இயங்குகின்றன. அரசு பேருந்துகள் இல்லாத நேரங்களில் தனியார் பேருந்துகளை கிராமவாசிகள் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது அவை மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுவதால், கிராமவாசிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனியார் பேருந்துகளை அதன் வழித்தடத்தில் பயணிக்கின்றவா என கண்காணிக்கப்படுவது இல்லை என சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தனியார் பேருந்துகள், அனுமதி பெற்ற வழித்தடத்தில் இயங்காமல், வசூல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் மட்டும் இயங்குகின்றன. இதனால் கிராமப்புறங்களில் பேருந்து சேவை குறைகிறது. போக்குவரத்துதுறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us