Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பூவலம்பேடு துணை மின் நிலைய பணிகள் விரைவு படுத்த கோரிக்கை

பூவலம்பேடு துணை மின் நிலைய பணிகள் விரைவு படுத்த கோரிக்கை

பூவலம்பேடு துணை மின் நிலைய பணிகள் விரைவு படுத்த கோரிக்கை

பூவலம்பேடு துணை மின் நிலைய பணிகள் விரைவு படுத்த கோரிக்கை

ADDED : மார் 13, 2025 10:51 PM


Google News
கும்மிடிப்பூண்டி:பஞ்செட்டி துணை மின் நிலையத்தின் கீழ், கவரைப்பேட்டை அடுத்த பூவலம்பேடு மின் பொறியாளர் அலுவலகம், இயங்கி வருகிறது. அங்கிருந்து, குருவராஜகண்டிகை, பில்லாக்குப்பம், பாத்தப்பாளையம் உள்ளிட்ட, 25 கிராமங்களுக்கு மின் வினியோகம் செயயப்பட்டு வருகிறது.

கிராம பகுதிகளில், மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆறு ஆண்டுகளாக, மின் பற்றாக்குறை ஏற்பட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால், கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னை குறித்து, பல முறை பூவலம்பேடு மற்றும் பஞ்செட்டி மின் அலுவலகங்களில், மக்கள் புகார் அளித்தனர்.

அதன்படி பூவலம்பேடு கிராமத்தில் துணை மின் நிலையம் அமைப்பது என வடசென்னை மின் பகிர்மான வட்டம் சார்பில், முடிவு எடுக்கப்பட்டது.

அதற்காக, பூவலம்பேடு அருகே உள்ள அமிர்தமங்களம் கிராமத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை துணை மின் நிலையம் அமைக்காமல், மின்வாரியம் அலட்சியம் செய்து வருகிறது. மேலும் தாமதிக்காமல் உடனடியாக பூவலம்பேடு துணை மின் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கண்ட கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us