ADDED : ஜூலை 15, 2024 11:14 PM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் இல்லாமல் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் நேற்று மாலை 6:00 மணியளவில் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சித்தைய்யா ஜெகதீசன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிவாசிகளிடம் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று உறுதியளித்தையடுத்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.