Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு

அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு

அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு

அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு

ADDED : ஜூன் 28, 2024 10:57 PM


Google News
பொன்னேரி:பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 7ம் தேதி முதல், சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது.

நேற்று மீஞ்சூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட மீஞ்சூர், வல்லுார், அத்திப்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மீஞ்சூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் எம். அபுபக்கர் கொடுத்த மனுவில் உள்ளதாவது:

அரியன்வாயல் பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் அமைத்திட வேண்டும்; அரசுக்கு சொந்தமான வாய்க்கால், தரிசு, அனாதினம் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன, அவற்றை மீட்க வேண்டும்;

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us