/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.7.37 லட்சம் நல உதவி மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.7.37 லட்சம் நல உதவி
மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.7.37 லட்சம் நல உதவி
மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.7.37 லட்சம் நல உதவி
மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.7.37 லட்சம் நல உதவி
ADDED : ஜூலை 23, 2024 01:02 AM

திருவள்ளூர், மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 417 கோரிக்கை மனு பெற்ற கலெக்டர், 26 பேருக்கு 7,37 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவியை வழங்கினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், நிலம் சம்பந்தமாக 70, சமூக பாதுகாப்பு திட்டம்-67, வேலைவாய்ப்பு கோரி-46, பசுமைவீடு, அடிப்படை வசதி - 105, இதரதுறை-129 மனுக்களும் என மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியினை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 26 பயனாளிகளுக்கு 7.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவியை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்-வளர்ச்சி, சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி கலெக்டர் - பயிற்சி ஆயுஷ் குப்தா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.