Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஓராண்டாக சரிந்த நிலையில் நிழற்குடை தள்ளி நிற்கும் பஸ்களால் பயணியர் அவதி

ஓராண்டாக சரிந்த நிலையில் நிழற்குடை தள்ளி நிற்கும் பஸ்களால் பயணியர் அவதி

ஓராண்டாக சரிந்த நிலையில் நிழற்குடை தள்ளி நிற்கும் பஸ்களால் பயணியர் அவதி

ஓராண்டாக சரிந்த நிலையில் நிழற்குடை தள்ளி நிற்கும் பஸ்களால் பயணியர் அவதி

ADDED : ஜூன் 13, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில் கன்னடபாளையம் உள்ளது. இங்கு, கடந்த 2012ல், அ.தி.மு.க ஆட்சியில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையில், கால்நடைகள் கட்டப்பட்டு, மாட்டு தொழுவம் போல் மாறியது. இதனால், மழை காலங்களில் கூட பயணியர் ஒதுங்கி நிற்க முடியாத நிலையில், பயனற்று இருந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயலை தொடர்ந்து, பராமரிப்பு இல்லாத அந்த நிழற்குடை, துருப்பிடித்து வலுவிழந்தது. தற்போது, மேலும் வலுவிழந்து, ஆபத்தான வகையில் சாலையில் சாய்ந்து நிற்கிறது.

நிழற்குடை சரிந்து இருப்பதால், அரசு பேருந்துகள் அப்பகுதியை விட்டு தள்ளி சென்று நிற்கிறது. இதனால், பெண்கள் உட்பட அனைவரும் ஓடி சென்று பேருந்தில் ஏறி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஆவடி எச்.வி.எப்., சாலை 'ஆர்ச்' முதல் கோவில்பதாகை வரை 3,200 மீ., தூரத்திற்கு, 11.70 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்தன. ஆபத்தான வகையில் சாய்ந்திருக்கும் பேருந்து நிழற்குடையை அகற்றாமல், அதையொட்டியே மழைநீர் வடிகால் பணியை மேற்கொண்டனர்.

அவர்களின் இந்த அலட்சிய போக்கால், எப்போது வேண்டுமானாலும் நிழற்குடை சரிந்து விழும் நிலையில் அபாய நிலையில் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சிதலமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்தி, மழைக்கு முன் புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us