ADDED : ஜூன் 22, 2024 11:23 PM
மீனம்பாக்கம் : இருசக்கர வாகனம்கட்டுப்பாட்டை இழந்ததில் துாக்கி வீசப்பட்ட நபர் இறந்தார்.
சென்னை, பல்லாவரம்,ஈஸ்வரன் நகர், நியூகாலனியை சேர்ந்தவர்சக்திவேல், 45. இவர் கடந்த, 16ம் தேதி ஆலந்துாரில் இருந்து பல்லாவரம் நோக்கி டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., 50 மொபட்டில் ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார். மழை பெய்த நிலையில், அதிவேகமாக சென்றபோது மீனம்பாக்கம் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து துாக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இறந்தார்.