Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

ADDED : ஜூன் 22, 2024 11:23 PM


Google News
செங்கல்பட்டு :செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார், 34; ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி சுகன்யா, 28, என்ற மனைவியும், பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம், சுகன்யா வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், பாபு என்பவரை பற்றி கேட்டு, பேச்சு கொடுத்துள்ளார்.

'அதுபோல யாரும் இல்லை'யென சுகன்யா கூறியதும், மர்ம நபர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். சுகன்யா தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றபோது, அவரும் பின்தொடர்ந்து சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, 4 கிராம் தங்க கம்மலை பறித்துள்ளார்.

பின், பீரோவை திறக்கும்படி கூறி மிரட்டியுள்ளார். அப்போது சுகன்யா கூச்சலிட்டதால், மர்ம நபர் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து பாலகுமார் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us