ADDED : ஜூலை 27, 2024 07:31 AM
கும்மிடிப்பூண்டி, : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 22. கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு டூ- - வீலரில் வந்த மூன்று மர்ம நபர்கள், கத்தியால் சதீஷ்குமாரை தாக்கி மொபைல்போனை பறித்துச் சென்றனர்.
அவரின் வலது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரித்து வருகின்றனர்.