Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது

10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது

10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது

10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது

ADDED : ஜூன் 24, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
திருத்தணி : கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து, 57 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டத்தில், போலீசார் மற்றும் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து கள்ளச்சாராய வேட்டை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை சாராயம் விற்றது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக, ஆறு பெண்கள் உள்பட, 15 பேரை கைது செய்து, 70 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.

நேற்று ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பாண்டரவேடு காலனி பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல், 47 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த, 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us