Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசூரில் ஆகாயத்தாமரை சூழ்ந்து கோவில்குளம் பாழ்

அரசூரில் ஆகாயத்தாமரை சூழ்ந்து கோவில்குளம் பாழ்

அரசூரில் ஆகாயத்தாமரை சூழ்ந்து கோவில்குளம் பாழ்

அரசூரில் ஆகாயத்தாமரை சூழ்ந்து கோவில்குளம் பாழ்

ADDED : ஜூன் 30, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
பொன்னேரி:பொன்னேரி அடுத்த அரசூர் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சவுந்தர்யவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் பின்புறம் உள்ள குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. குளம் முழுதும் ஆகாயத்தாமரை மற்றும் முள்செடிகள் சூழ்ந்து கிடக்கின்றன.

குளத்தில், ஆகாயத்தாமரை சூழ்ந்து கிடப்பதால், அதில் தேங்கியுள்ள தண்ணீரை கிராமவாசிகள் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. குளம் பராமரிப்பு இன்றி, பாழடைந்து இருப்பதை கண்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். கோவில் குளத்தில் சூழந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, தேவையான இடங்களில் படித்துறைகள் அமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us