Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கண்களுக்கு புலப்படாத வேகத்தடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

கண்களுக்கு புலப்படாத வேகத்தடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

கண்களுக்கு புலப்படாத வேகத்தடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

கண்களுக்கு புலப்படாத வேகத்தடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : ஜூன் 19, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கண்களுக்கு புலப்படாத வகையில் வண்ணம் பூசாத வேகத்தடைகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணித்து வருகின்றனர்.

சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கவரைப்பேட்டையில், 2 கி.மீ., தொலைவிற்கு, இணைப்பு சாலையில் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

அந்த இணைப்பு சாலையில், முக்கிய இடங்களில், 10க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. அனைத்து வேகத்தடைகளும் கண்களுக்கு புலப்படாத வகையில் வண்ணம் இன்றி காணப்படுகின்றன.

அப்பகுதியில் வேகத்தடை இருப்பதற்கான எச்சரிக்கை பலகையும் இல்லை. இதனால், வேகத்தடை இருப்பது தெரியாமல், அதன் மீது வாகனங்களை செலுத்தும் வாகன ஓட்டிகள் திக்கு முக்காடிப் போகின்றனர்.

குறிப்பாக இரவு நேரத்தில் டூ- -வீலர்கள் துாக்கி வீசப்படுவதும், காயம் அடைவதும் வாடிக்கையானது. உடனடியாக கவரைப்பேட்டையில் உள்ள வேகத்தடைகள் அனைத்திலும் வண்ணம் அடித்து, ஒளிரும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us