/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போக்குவரத்து பாதிப்பால் தொழிற் சாலைகள் தவிப்பு பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போக்குவரத்து பாதிப்பால் தொழிற் சாலைகள் தவிப்பு
பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போக்குவரத்து பாதிப்பால் தொழிற் சாலைகள் தவிப்பு
பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போக்குவரத்து பாதிப்பால் தொழிற் சாலைகள் தவிப்பு
பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போக்குவரத்து பாதிப்பால் தொழிற் சாலைகள் தவிப்பு

தேர்வாய்கண்டிகை சிப்காட்
தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகம், 2010ம் ஆண்டு, 1127 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது. தற்போது, பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் வளாகமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மிஷ்லின் டயர் தொழிற்சாலை, பிலிப்ஸ் கார்பன், பேட்டர் இந்தியா, சுந்தரம் க்ளேட்டன், வீல்ஸ் இந்தியா, பிரேக்ஸ் இந்தியா உட்பட மொத்தம், 46 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
ஸ்தம்பிக்கும் பெரியபாளையம்
மேற்கண்ட அனைத்து வகை வாகனங்களும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்திற்கு வந்து செல்கின்றன. அந்த வாகனங்கள், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் இருந்து கன்னிகைபேர், பெரியபாளையம், தண்டலம் வழியாக தேர்வாய்கண்டிகை வரையிலான 27.4 கி.மீ., சாலையை கடந்து வர வேண்டும். இடைப்பட்ட சாலையில், வாகன போக்குவரத்தின் குரல்வளையை இறுக்கி பிடிப்பது போன்று பெரியபாளையம் பகுதி அமைந்துள்ளது.
கிடப்பில் புறுவழிச்சாலை
மேற்கண்ட சாலை, 2023ம் ஆண்டுக்கு முன் வரை மாநில நெடுஞ்சாலை துறையினரின் பராமரிப்பில் இருந்தது. பெரியபாளையம் போக்குவரத்துக்கு தீர்வு காண புறவழிச்சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.