Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழுதடைந்த வி.ஏ.ஓ. ஆபீஸ் சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த வி.ஏ.ஓ. ஆபீஸ் சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த வி.ஏ.ஓ. ஆபீஸ் சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த வி.ஏ.ஓ. ஆபீஸ் சீரமைக்கப்படுமா?

ADDED : ஜூலை 21, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பம் ஊராட்சியில் பழைய அரசு பள்ளி அருகே வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அமைந்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் தற்போது கூரை, சுவர்கள் சேதமடைந்து அவ்வப்போது சிமென்டு பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. இதனால் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சான்றிதழ், நிலம், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட சேவைகளை பெற வரும் மக்கள் அலுவலகத்திற்குள் வர அச்சப்படுகின்றனர்.

சேதமடைந்துள்ள வி.ஏ.ஓ.,அலுவலக கட்டடத்தை சீரமைக்க வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம்


திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமிவிலாசபுரம் ஊராட்சியில் 2,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்ஊராட்சிமன்றஅலுவலகம்கட்டடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இக்கட்டடத்தை முறையாக ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், தற்போது கட்டடம் விரிசல் அடைந்துள்ளது.

மேலும், கூரை சேதடைந்து உள்ளதால் மழையின் போது தண்ணீர் ஒழுகி, அலுவலகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இது தவிர, ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஆவணங்கள் வைக்கும் அறைகள் சேதம் அடைந்துள்ளதால், பலமாதங்களாகஊராட்சிஅலுவலகம் கட்டடம் பூட்டியே கிடக்கிறது.

மேலும் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் சேதமடைந்த கட்டடத்தால் அலுவலகத்திற்கு உள்ளே வர அச்சப்படும் நிலை உள்ளது. எனவே பழுதடைந்தகட்டடத்தை சீரமைக்கசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us