கன்னிகைப்பேரில் போலி டாக்டர் கைது
கன்னிகைப்பேரில் போலி டாக்டர் கைது
கன்னிகைப்பேரில் போலி டாக்டர் கைது
ADDED : ஜூலை 08, 2024 02:02 AM

பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, கன்னிகைப்பேர் பஜார் பகுதியில் போலி மருத்துவர் மருத்துவம் பார்ப்பதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் மீரா தலைமையிலானா குழுவினர், நேற்று முன்தினம் மாலை கன்னிகைப்பேர் பஜார் பகுதியில் இயங்கி வரும் சூர்யா மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
இதில், மருத்துவம் பார்த்து வந்த கவரைப்பேட்டையைச் சேர்ந்த ரஹீம், 55, என்பவர், பி.எஸ்சி., பட்டப் படிப்பு முடித்து மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது. இதுகுறித்து துணை இயக்குனர் மீரா புகாரின் படி பெரியபாளையம் போலீசார் ரஹீமை கைது செய்தனர்.