Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தரமற்ற அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற கோரிக்கை

தரமற்ற அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற கோரிக்கை

தரமற்ற அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற கோரிக்கை

தரமற்ற அங்கன்வாடி மையம் இடித்து அகற்ற கோரிக்கை

ADDED : ஜூன் 03, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு: திருவாலங்காடு ஊராட்சியில், பவானி நகர், பராசக்தி நகரில் பி.டி.ஓ., அலுவலக வாயிலில், எட்டு ஆண்டுகளுக்கு முன் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டப்பட்டது.

இந்த கட்டடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், கட்டடம் உறுதி தன்மையுடன் இல்லை என சான்றளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பழைய கட்டடம் அருகே புதிதாக அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதுடன், மூன்று ஆண்டுகளாக புதர்மண்டி காணப்படுகிறது. இக்கட்டடம் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளதால், பி.டி.ஓ., அலுவலகம் வருவோர் ஒருவித அச்சத்துடனேயே வருகின்றனர்.

எனவே, பயன்பாடின்றி உள்ள இந்த கட்டடத்தை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us