/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இறுதி சடங்கில் நடனம் ஆடுவதில் மோதல்; 12 பேர் படுகாயம் இறுதி சடங்கில் நடனம் ஆடுவதில் மோதல்; 12 பேர் படுகாயம்
இறுதி சடங்கில் நடனம் ஆடுவதில் மோதல்; 12 பேர் படுகாயம்
இறுதி சடங்கில் நடனம் ஆடுவதில் மோதல்; 12 பேர் படுகாயம்
இறுதி சடங்கில் நடனம் ஆடுவதில் மோதல்; 12 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 29, 2024 09:57 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் தாடூர் காலனி சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி ஆறுமுகம், 65 என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இறுதி சடங்கு நேற்று மாலையில் நடந்தது. முன்னதாக வீட்டின் முன் மேளம் அடித்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சங்கர், 48, வஜ்ரவேல், 61 ஆகிய இருவரும் நடனம் ஆடினர்.
அப்போது தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து இது தரப்பினர் ஆதரவாளர்கள் என மொத்தம், 25க்கும் மேற்பட்டோர், இரும்பு ராடு, உருட்டை கட்டை, கத்தி மற்றும் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், இரு தரப்பிலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும், தாடூர் காலனி சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் வஜ்ரவேலுக்கு ஆதரவாக சங்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திருத்தணி- - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை இ.என்.கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையிலான, 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்தவர்களிடம் சமரசம் செய்தனர்.