Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பேச்சு, கட்டுரை போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

பேச்சு, கட்டுரை போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

பேச்சு, கட்டுரை போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

பேச்சு, கட்டுரை போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 04, 2024 09:21 PM


Google News
திருவள்ளூர்:பள்ளி மாணவ - மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டி கலெக்டர் அலுவலகத்தில், வரும் 10ம் தேதி நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18ம் தேதி 'தமிழ்நாடு நாளாக' தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு போட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 10ல் நடக்கிறது.

முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு, முறையே, 10,000, 7000 மற்றும் 5000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்வி மாவட்டத்திற்கு, ஒரு போட்டிக்கு 30 பேர் வீதம், இரண்டு கல்வி மாவட்டத்திற்கு 60 பேர் என, இரண்டு போட்டிகளுக்கு 120 பேரை தேர்வு செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us