Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாகசாலை கோவிலில் பிரம்மோத்சவ விழா நிறைவு

பாகசாலை கோவிலில் பிரம்மோத்சவ விழா நிறைவு

பாகசாலை கோவிலில் பிரம்மோத்சவ விழா நிறைவு

பாகசாலை கோவிலில் பிரம்மோத்சவ விழா நிறைவு

ADDED : மார் 14, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை கிராமத்தில் கொசஸ்தலையாற்றின் தென் புறத்தில் அமைந்துள்ளது பாலசுப்ரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி பிரம்மோத்சவ விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 3ம் தேதிகொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

தொடர்ந்து, 10 நாட்களுக்கு நடைபெற்றபிரம்மோத்சவ விழாவில், வினையறுக்கும் வேல் பூஜை, 9ம் தேதி நடந்தது. 10ம் தேதி திருக்கல்யாணம், நேற்று முன்தினம் மாசிமகம் நடைபெற்றது.

மாலை, தீர்த்தவாரியும்; இரவு, இந்திர விமானத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. நேற்று, விடையாற்றி மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவு பெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us