/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வளசரவாக்கம் இரட்டை கொலை குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை வளசரவாக்கம் இரட்டை கொலை குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை
வளசரவாக்கம் இரட்டை கொலை குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை
வளசரவாக்கம் இரட்டை கொலை குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை
வளசரவாக்கம் இரட்டை கொலை குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை
ADDED : ஜூன் 14, 2024 01:19 AM
திருவள்ளூர்:வளசரவாக்கம் இரட்டை கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் விடுதலை செய்யப்பட்டார். சென்னை வளசரவாக்கம் வேலன் நகரைச் சேர்ந்தவர் வேதநாயகி, 82. இவரது மகள் தாரகதீஸ்வரி, 60.
கடந்த 2020ம் ஆண்டு ஜன,.24 ம் தேதி இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து வளரசரவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, வேதநாயகி மகன் குகதாசன் ,30 என்பவரை கைது செய்தனர். இலங்கை தமிழரான இவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அரசு தரப்பில் அமுதா, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் நந்தகுமார், பாலரகுராமன் ஆஜராகி வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி, குகநாதன் மீது குற்றம் நிரூபணமாகாததால், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.