ADDED : ஜூன் 14, 2024 01:19 AM
கடம்பத்தூர்:கடம்பத்துார் கசவநல்லாத்துார் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ராமு, 55, கடம்பத்தூர் பகுதியில் முட்டை கடை நடத்தி வருகிறார்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கடம்பத்துார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27 சவரன் நகை மற்றும் 40,000 ரூபாய் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.