Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லாரியில் கடத்திய 10 டன் குட்கா பறிமுதல்

லாரியில் கடத்திய 10 டன் குட்கா பறிமுதல்

லாரியில் கடத்திய 10 டன் குட்கா பறிமுதல்

லாரியில் கடத்திய 10 டன் குட்கா பறிமுதல்

ADDED : ஜூலை 26, 2024 11:08 PM


Google News
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து சென்னைக்கு லாரிகள் வாயிலாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி மேற்பார்வையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை, பெத்திக்குப்பம் சந்திப்பில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற இரு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். இரு லாரிகளிலும், 10,800 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா வகையை சேர்ந்த பான் மசாலா கேஸ்கள், தார்ப்பாய் போட்டு மறைத்து எடுத்து சென்றது தெரியவந்தது.

லாரிகளுடன், குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், லாரி ஓட்டுனர்களான, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தினகரன், 48, வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த நரேஷ், 27, குட்கா பொருட்கள் உரிமையாளர் சென்னை அண்ணாசாலையை சேர்ந்த அரவிந்த் பாண்டே, 39, லாரி உரிமையாளர் மாதவரம் பகுதியை சேர்ந்த சங்கரன், 40, ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us