Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தண்டவாளங்கள் சீரமைப்பு நிறைவு திருச்செந்துார் தடத்தில் ரயில் இயக்கம்

தண்டவாளங்கள் சீரமைப்பு நிறைவு திருச்செந்துார் தடத்தில் ரயில் இயக்கம்

தண்டவாளங்கள் சீரமைப்பு நிறைவு திருச்செந்துார் தடத்தில் ரயில் இயக்கம்

தண்டவாளங்கள் சீரமைப்பு நிறைவு திருச்செந்துார் தடத்தில் ரயில் இயக்கம்

ADDED : ஜன 07, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி,:திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதால், நேற்று இரவு செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இன்று முதல் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், டிச., 17, 18ல் கனமழை பெய்தது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் குளங்கள் உடைப்பால், திருநெல்வேலி - திருச்செந்துார் ரயில் தண்டவாளத்தில், தாதன்குளம், நாசரேத் உட்பட ஐந்து இடங்களில் அரிப்பு ஏற்பட்டன.

தற்போது அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. நேற்று தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையில் இன்ஜின் வேக சோதனை ஓட்டம் நடந்தது.

இதில், ரயில் இன்ஜின் மட்டும் அதிகபட்சமாக, 75 கி.மீ., வேகத்தில் பயணித்தது. வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்ட பகுதியில், 20 கி.மீ., வேகத்தில் சென்றது.

திருநெல்வேலியில் நேற்று காலை, 11:28க்கு கிளம்பிய ரயில் இன்ஜின் மதியம், 12:35க்கு திருச்செந்துார் ரயில் நிலையம் அடைந்தது. பின், 12:45க்கு அங்கிருந்து கிளம்பிய ரயில் இன்ஜின் மதியம், 2:10க்கு திருநெல்வேலி அடைந்தது.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துாருக்கு நேற்று மாலை, 5:00 மணிக்கு கிளம்பி சென்ற செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு, 8:30 மணிக்கு வழக்கம் போல திருச்செந்துாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இன்று காலை முதல், வழக்கமான ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us