/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ 14 பேரை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு 14 பேரை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு
14 பேரை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு
14 பேரை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு
14 பேரை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : செப் 22, 2025 04:01 AM
திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரத்தில், 14 பேரை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன், 40. இவரது வீட்டில் வளர்க்கும் நாய், தெருவில் சென்ற 13 பேரை கடித்தது.
கிருஷ்ணனையும் கடித்தது. இதில், பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில், மூன்று மாதங்களில் வெவ்வேறு நாய்கள் கடித்ததில் , 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
எனவே, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் புகாரின்படி, நாய் உரிமையாளர் கிருஷ்ணன் மீது, விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.