Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ ரூ. 75 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி மதுரையை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது

ரூ. 75 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி மதுரையை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது

ரூ. 75 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி மதுரையை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது

ரூ. 75 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி மதுரையை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது

ADDED : மார் 27, 2025 03:11 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி:திருநெல்வேலியை சேர்ந்த வர்த்தகரிடம் அமெரிக்க டாலர் கிரிப்டோ கரன்சிக்கு மாற்றாக ரூ. 75 லட்சம் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் ஆண்டனி செல்வன் 41. திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜராஜேஸ்வரி நகரில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்து வருகிறார். இவரிடம் ஏற்கனவே அறிமுகமான மதுரை அழகர் கோவில் சாலையை சேர்ந்த முகமது ரியாஸ் 36, சங்கரன்கோவில், தலைவன்கோட்டை அய்யாதுரை 37, கயத்தாறு இசக்கிமுத்து 28 ,ஆகியோர் வெளிநாட்டு கரன்சி பரிமாற்ற தொழிலில் ஈடுபடுவதாக கூறினர்.

தங்களுக்கு அமெரிக்க டாலர் டெதர் கிரிப்டோ கரன்சி தேவைப்படுவதாக கூறி நமது நாட்டின் ரூ. 75 லட்சம் நோட்டுக்களை கொடுத்தனர். அதற்கு பதிலாக 82 ஆயிரத்து 691 எண்ணிக்கையிலான அமெரிக்க டெதர் டாலர் கிரிப்டோ கரன்சியை ஆன்லைன் மூலம் தங்கள் கணக்கில் பெற்றுக் கொண்டனர்.

இதனிடையே அவர்கள் தந்த ரூ. 75 லட்சம் நோட்டுகளை சரிபார்த்த போது அவை போலியான கலர் ஜெராக்ஸ் என தெரிய வந்தது. இதுகுறித்து ஆண்டனி செல்வன், பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவில் மதுரை முகமது ரியாஸ், அய்யாதுரை, இசக்கிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முகமது ரியாசிடமிருந்து ரூ. 75 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் டெதர் கரன்சியை மீட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us