Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கம்யூ., அலுவலகம் சூறையாடிய சம்பவம்: தலைவர் உட்பட 13 பேர் கைது

கம்யூ., அலுவலகம் சூறையாடிய சம்பவம்: தலைவர் உட்பட 13 பேர் கைது

கம்யூ., அலுவலகம் சூறையாடிய சம்பவம்: தலைவர் உட்பட 13 பேர் கைது

கம்யூ., அலுவலகம் சூறையாடிய சம்பவம்: தலைவர் உட்பட 13 பேர் கைது

ADDED : ஜூன் 16, 2024 01:31 AM


Google News
திருநெல்வேலி:திருநெல்வேலி, அன்பு நகரை சேர்ந்த முருகவேல் மகள் பட்டதாரியான உதயதாட்சாயினி, 24, அதே பகுதியை சேர்ந்த பட்டியலின வாலிபர் மதன்குமார், 28, என்பவரை காதலித்து, திருநெல்வேலி ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலர் ஸ்ரீராம் முன்னிலையில், ஜூன் 14ல் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கட்சி அலுவலகத்தில் திருமணம் நடந்ததால், நேற்று முன்தினம் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் பெண் சார்ந்த ஜாதி சங்கத்தினர் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர்.

இதில், வழக்கறிஞர் பழனி, மாணவர் சங்க மாவட்ட செயலர் அருள், மாநகராட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். சமுதாய சங்க தலைவர் பந்தல் ராஜா, பெண்ணின் குடும்பத்தினர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, 13 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான ஏழு பெண்களும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், கட்சி அலுவலகம் மீதான தாக்குதலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us