Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்

மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்

மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்

மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்

ADDED : ஜூலை 09, 2024 08:40 PM


Google News
Latest Tamil News
வள்ளியூர்:வள்ளியூர் அருகே மருத்துவமனையில், 5 லட்சம் ரூபாய் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில், டாக்டர் ஆன்றோ ரொமைன் தாஸ் மருத்துவமனை நடத்துகிறார். கடந்த மாதம் 25-ம் தேதி, கர்நாடகா மாநிலம் மைசூரு அருகேயுள்ள சான்சத்திர ஹள்ளி பாரத் நகரைச் சேர்ந்த ஜீவன்லால், 57, என்பவர் சிகிச்சைக்காக இங்கு வந்தார். சிகிச்சை முடிந்து கிளம்பும்போது, டாக்டர் அறையில் இருந்த 5 லட்சம் ரூபாயை அபேஸ் செய்து கொண்டு சென்றார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், மைசூர் அருகே பிருந்தாவனத்தில் பதுங்கியிருந்த ஜீவன்லாலை கைது செய்து, 1.75 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us