/உள்ளூர் செய்திகள்/தேனி/மாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் வழிபாடுமாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் வழிபாடு
மாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் வழிபாடு
மாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் வழிபாடு
மாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் வழிபாடு
ADDED : பிப் 25, 2024 04:28 AM

போடி, : மாசி மகத்தை முன்னிட்டு போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பேஸ்வரர் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், விசுவாசுபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பவுர்ணமி பூஜை
பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மாசி மகம் பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனமும், கிரிவலம் சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப்,
செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜய ராணி செய்திருந்தனர்.
பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் மாசி மகம் பவுர்ணமியை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், அக்னி பிரதிஷ்டை, கலச பூஜை மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டன.
முப்பெரும் தேவியருக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 11 வகை பொருட்களில் அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.